web log free
May 24, 2026

ரணிலை விரட்டுவது எப்படி? ஹிருணிக்காவின் அறிவிப்பு

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றியது போன்று ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து வெளியேற்ற முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை மூளையை பயன்படுத்தி விரட்ட வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

கோட்டாபாய ராஜபக்ச சர்வாதிகாரியாக மாறி மக்களை ஒடுக்குவார் என்று தான் முதலில் நினைத்ததாகவும், இறுதியில் அவர் எதுவும் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

ஆனால் கோட்டாபாய ராஜபக்ஷ பயன்படுத்தாத சகல சூழ்ச்சிகளையும் சதிகளையும் தற்போதைய ஜனாதிபதி பயன்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஜனவரி மாத இறுதிக்குள் மக்களின் பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும் எனவும், மக்கள் வீதிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd