web log free
February 07, 2026

விண்ணப்பங்கள் 50 சதவீதமே கிடைத்துள்ளன

கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு மாணவர்களிடம் இருந்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் 50 சதவீதமே தற்போது வரை கிடைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

முழுமையாக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது வரையில் 50 சதவீதமான விண்ணப்பப்படிவங்களே கிடைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd