web log free
November 26, 2025

ஆளும், எதிர்கட்சியை சேர்ந்த 9 பேருக்கு அமைச்சுப் பதவி

தொடர்ச்சியாக தாமதமாகி வந்த அமைச்சரவை மாற்றத்தை துரிதப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி முதற்கட்டமாக இரண்டு அமைச்சுப் பதவிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டு அந்த அமைச்சுப் பதவிகள் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்குச் சென்றன.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 6 உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd