web log free
November 17, 2025

நானுஓயா விபத்து, பஸ் சாரதிக்கு விளக்கமறியல்

நானுஓயா பகுதியில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதி எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா நீதவான் நாலக சஞ்சீவ எதிரிசிங்க விடுத்த உத்தரவின் பிரகாரம் இவ்வாறு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். 

பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் தற்போது நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், வைத்தியசாலைக்கு சென்று அவரை பரிசோதித்ததன் பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd