web log free
May 09, 2025

பாரிய போராட்டத்திற்குத் தயாராகும் தொழிற்சங்கங்கள்

30ஆம் திகதி அனைத்து துறைமுக தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இறுதிப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் நிரோஷன கோரக்கன தெரிவித்தார். 

இந்தக் கூட்டுப் போராட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி கோட்டை  மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்போதும் கூட இந்த வரி திருத்தச் சட்டம் தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலுக்கும் தொழிற்சங்கங்களை அரசாங்கம் அழைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

துறைமுகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த கூட்டுப் போராட்டத்திற்கு இணங்கி மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கும், எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd