web log free
September 16, 2024

சுதந்திர தினத்தில் கொழும்பு வரும் கோழிகள்.!

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் நாட்டின் முட்டை பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை உணவக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அதனைச் செய்யத் தவறினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நாட்டுக் கோழிகளை எடுத்துச் சென்று அந்த மிருகங்களின் குரல் கேட்க வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தலைவர், சுதந்திர தினத்தன்று முட்டை மற்றும் கோழிகளுடன் கால் நடையாக சுதந்திர விழாவிற்கு வரவுள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டின் ஆட்சியாளர்களால் முட்டைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாவிட்டால், நாட்டின் பாரிய பிரச்சனைகள் மற்றும் அரசியலமைப்புச் சிக்கல்கள் எவ்வாறு தீர்க்கப்படும் என இலங்கை உணவக உரிமையாளர்கள் அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர்.