web log free
October 28, 2025

தொடரும் கொலை மிரட்டல்..!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான எம்.எம்.முஹம்மட்டை தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், முன்னதாக கொலை மிரட்டல் வந்த எஸ்.பி. திவரத்னவுக்கு மீண்டும் ஒருமுறை குறுஞ்செய்தி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட  உறுப்பினர்களான பத்திரன மற்றும் திவரத்ன ஆகியோருக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.பி. .திவரத்ன மற்றும் பத்திரனவிற்கு18ஆம் திகதி தனது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd