web log free
July 01, 2025

11 கத்திகளுடன் ஒருவர் கைது

காலி, ரிச்மன்ட கந்த பகுதியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் 11 கத்திகளுடன் நபரொருவர் நேற்று (08) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காலி பொலிஸ் விசேட குற்ற விசாரணை பிரிவினரால் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கத்திகளில், இத்தாலியில் தயாரிக்கப்பட்ட இரண்டு கத்திகள் இருந்தாக பொலிஸார் கூறியுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd