web log free
April 20, 2024

கோடீஸ்வர வர்த்தகர் கொலையின் மர்ம முடிச்சு அவிழ்ந்தது

பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் மரணமடைந்த கோடீஸ்வர வர்த்தகர்  பொல்லால் தலையில் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கும் வர்த்தகருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் போது தொழிலதிபர் நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த தொழிலதிபர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் நபர் எனவும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடவென அழைக்கப்பட்ட நபர் கோரிய ஒரு லட்சம் ரூபா பணத்தை வழங்க மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் சென்று முடிந்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd