web log free
October 18, 2024

அரசியல் கட்சிகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிப்பதாக ஜனாதிபதி உறுதி

இலங்கையின் அரசியல் கட்சிகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து அவை நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் அறிக்கை சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சிப் பதிவு, வெளிப்படையான செயல்பாடு, உறுப்பினர் உரிமை, நிதி மற்றும் வருமானத்தைப் பெறுதல், தேர்தல் பிரச்சாரச் செலவுகள், ஊடகங்களைப் பயன்படுத்துதல் போன்ற விடயங்களை ஆராயும் பொறுப்பு இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தனது கொள்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது செயற்படும் அரசியல் கட்சிகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டும்.அரசியல் கட்சிகளை விட, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் கூட்டணிகளே தற்போதைய பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.

இதில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் காசுக்கு விற்கப்பட்டுள்ளன. பேட்டையில் நடைபாதையில் இருப்பது போல், கட்சி மற்றும் சின்னம் விற்கப்படுகிறது. சில விற்கப்படுகின்றன. தரப்பினரின் உரிமை தொடர்பில் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.