web log free
October 18, 2024

மேலும் ஒரு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று  பள்ளத்தில் விழுந்து இன்று (10) விபத்து ஏற்பட்டுள்ளது.

இரத்தினபுரி - சிறிபாகம வீதியில் இந்துருவ - மஹவங்குவாவிற்கு அருகில் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தில் பயணித்த 28 பேர் காயமடைந்து கிலிமெல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமானதால் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.