web log free
September 16, 2024

'தேர்தலுக்கு பணம் தரவில்லை என்றால் வழக்கு தொடர்வேன்'

தற்போது திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அனைவரது ஆதரவும் தேவை என்றும் அவ்வாறு செய்யாத அனைத்து தரப்பினர் மீதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதத்திற்கு தேவையான 80 கோடி ரூபா நிதி திறைசேரியிடம் கோரப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அது வழங்கப்படவில்லை என்றும் அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா வார இறுதி நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்தார்.

எனினும் இதற்கு முன்னர் கோரப்பட்ட பத்து கோடி ரூபா பணம் கிடைத்துள்ளதாகவும் தலைவர் குறிப்பிடுகின்றார்.