web log free
December 08, 2025

எங்கள் வீட்டு நாயை திருடியவர் இன்று ஜேவிபி வேட்பாளர்

எங்களது வீட்டில் நாயை திருடியவர் வீரகெட்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் வாக்கு கேட்கிறார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த போராட்டங்களின் போது வீடுகளை எரிக்க வந்தவர்கள் ஜே.வி.பி பட்டியலிலும் வாக்கு கேட்பார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

மனித கடத்தலில் ஈடுபட்ட ஒருவரும் ஜே.வி.பியின் வேட்பாளராக மாறியுள்ளதுடன் சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவரும் வேட்பாளராக முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd