web log free
December 11, 2025

நீதிமன்றில் இருந்து சிங்களத்தில் வந்த அழைப்பாணை! ஶ்ரீதரன் எம்பி செய்த காரியம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனுக்கு யாழ்.நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  அனுப்பப்பட்ட ஆவணம் சிங்கள மொழியில் இருப்பதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நேற்று (14) பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

நேற்று 20ஆம் திகதி யாழ்.நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கும் ஆவணத்தை கையளிப்பதற்காக எம்.பி.யை பொலிஸ் அதிகாரிகள் சந்தித்த போது, ​​உரிய ஆவணம் சிங்களத்தில் இருப்பதால் சிங்களம் வாசிக்க முடியாது என பொலிஸாரிடம் தெரிவித்தார்.

பின்னர், பொலிஸ் அதிகாரிகள் அதனை மொழிபெயர்த்து பாராளுமன்ற உறுப்பினரிடம் கொடுத்த போது, ​​பொலிஸாரால் நீதிமன்ற அழைப்பாணை, நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும், நீதிமன்றில் இருந்து தமிழ் மொழியில் கிடைத்தால் தான் ஏற்றுக் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd