web log free
April 30, 2026

40 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்த 26 வயது நபர்

குருணாகல் நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றுக்குள் வைத்து 40 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின் பேரில் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 26 வயதுடைய சந்தேக நபர் திருகோணமலை கடற்படை முகாமில் பணிபுரிந்து வருகிறார்.

குறித்த பெண் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் பொத்துஹெர பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸ் குழுவொன்று மல்பிட்டிய பிரதேசத்தில் பஸ்ஸை நிறுத்தி சந்தேக நபரான சிப்பாயை கைது செய்தது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd