web log free
October 18, 2024

பிற்போடப்பட்டது தேர்தல்

எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தபால் வாக்குச் சீட்டுகள் உரிய தேதியில் அரசு அச்சகத்தால் விநியோகிக்கப்படவில்லை என்பதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.