web log free
December 08, 2025

கொழும்பு கோட்டையை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல்

தற்போது துறைமுக நுழைவாயிலுக்கு முன்பாக வீதியை மறித்து துறைமுக ஊழியர்கள் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டையை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிச் சட்டத்திற்கு எதிராக தொழில்துறையினர் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துடன் துறைமுக ஊழியர்கள் தற்போது துறைமுக நுழைவாயிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd