web log free
April 24, 2024

கொழும்பில் நாளை நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (04) பிற்பகல் 02.00 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 01 முதல் 04 வரை, கொழும்பு 07 முதல் 11 வரை, கடுவெல நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள கொலன்னாவ மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டிகாவத்தை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.