web log free
April 29, 2025

உள்ளூராட்சி தேர்தல் திகதி

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதியை மார்ச் 9 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே பிற்போடப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதியை நேற்று அறிவிப்பதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டிருந்தது.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு அமைய, நிதி அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி, தேர்தலுக்கு பொருத்தமான திகதியை அறிவிக்க தீர்மானித்ததாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய திகதி மார்ச் 9 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd