web log free
February 04, 2026

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட்டால்..

எதிர்காலத்தில் இலங்கையில் நிலநடுக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மையம், கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய நிறுவனங்களையும் இணைத்து இந்தத் திட்டத்தைத் தயாரித்து வருவதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் கூறுகிறது.

மொனராகலை புத்தல பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட சிறிய நில அதிர்வுகள் காரணமாக அப்பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜனக அஜித்பிரேம குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd