web log free
March 25, 2026

11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாடசாலை அதிபர் கைது

பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை சந்தேக நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய அதிபர் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd