web log free
November 19, 2025

பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதிக்கு வந்த அழுத்தம்

பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்துள்ளதால், அவர் உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மக்களின் அபிப்பிராயத்திற்கு அமைய நியமிக்கப்படும் புதிய அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்தாமல் அரசாங்கத்தை நடத்த முயற்சிப்பதன் மூலம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களின் ஆதரவை இலங்கை பெறாது என்றும் அவர் கூறுகிறார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd