web log free
May 09, 2025

பிரதேச சபை தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

களுத்துறை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் இறுதித் தீர்மானம் வரும் வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும். களுத்துறை பிரதேச சபைக்கானபுதிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் பொதுச் செயலாளர் திலக் வராகொட மற்றும் அதன் களுத்துறைக்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர் செனல் வெல்கம ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் தேர்தல் ஆணையம் மற்றும் பலரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளனர்.

பிரதிவாதியான தேர்தல் ஆணையம் ஆட்சேபனைகள் இருந்தால் இரண்டு வாரங்களுக்குள்ளும், மனுதாரர்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு எதிர் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த மனு மே 12ஆம் திகதி வாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரேசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றது.

மனுதாரர்கள் சார்பாக அனுராத வேரகொடவின் அறிவுறுத்தலின் பேரில் ஆஷிக் ஹாசிம் உடன் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரியா ஆஜரானார். தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் சட்டத்தரணி தர்ஷன வெரதுவகே ஆஜரானார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd