web log free
June 06, 2023

நடு வீதியில் உள்ளாடைகளை கழட்டிய பெண்கள்! பிரபல அமைச்சர் தகவல்

போராட்டத்தின் போது பெண்கள் பிரதான வீதியில் இருந்து உள்ளாடைகளை கழட்டி அகற்றி நாட்டின் சட்டம் ஒழுங்கை சீரழித்ததாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கின்றார்.

எனவே, தேர்தலை நடத்துவதற்கு முதலில் நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று கூறும் அவர், தேர்தலை நடத்துவதா வேண்டாமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதியின் முயற்சியின் கீழ் தற்போது சில நிர்வாகங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நாடு ஓரளவு ஸ்திரத்தன்மை பெற்று வருவதாகவும் அதற்காக எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் மக்கள் தீர்மானங்கள் அல்ல எனவும் அவர் கூறுகிறார்.