web log free
April 06, 2026

எவ்வித அறிவித்தலுமின்றி சேவையிலிருந்து விலகியுள்ள 900 பொலிஸார்

இந்த வருடம் 260 பொலிஸார் எவ்வித அறிவித்தலுமின்றி சேவையிலிருந்து விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் சர்ஜன்ட்களாவர்.

இவர்களில் பலர் மன அழுத்தம், பொருளாதார பிரச்சினைகள், அதீத கடமைகள், கடமை அழுத்தங்கள், ஓய்வின்மை போன்ற காரணங்களால் பொலிஸ் சேவையை விட்டு விலகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த 2022ஆம் ஆண்டு 900 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் சேவையை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd