web log free
April 29, 2025

100 மில்லியன் செலுத்த தவறினால் நான் சிறையில் அடைக்கப்படுவேன்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்குவதற்காக, தன்னால் முடிந்தவரை தனது கூட்டாளிகளிடம் பணம் வசூலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பத்தேகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, உரிய நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் இழப்பீடு வழங்கப்படாவிட்டால், நீதிமன்றம் தன் மீது என்ன முடிவு எடுக்கும் எனத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

“நான் உலகை வென்று, நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, இந்த நாட்டை நல்ல நாடாக மாற்றிய போது, ஈஸ்டர் தாக்குதல் நிகழ்ந்து, எந்த தடயமும் இல்லாமல் போய்விட்டது. எனவே, எனக்கு ரூ. 10 மில்லியன் இழப்பீடு செலுத்த உத்தரவிட்டது."

“நான் எதையும் திருடவில்லை; நான் குண்டு வீசவில்லை."

"இந்த நாட்களில், எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் பணம் வசூலிக்கிறேன்."

“எனக்கு கொஞ்சம் பணம் கொடுங்கள்; எனக்கு 6 மாதங்கள்தான் அவகாசம். இப்போது மூன்று மாதங்கள் ஆகின்றன."

“இந்த 6 மாதங்களுக்குப் பிறகு என்னை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிடுமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் சட்டத்தில் நிபுணன் இல்லை என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd