web log free
January 23, 2026

அடுத்து வரும் நாட்களில் பாராளுமன்றில் ஏற்படப்போகும் மாற்றம்

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்னதாக  4ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளதாகவும், அன்றைய தினம் அவர்களில் ஒரு குழு அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் பல சந்தர்ப்பங்களில் இந்தப் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த மாற்றம் ஏற்பட்டால் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கும் அபாயம் உள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd