web log free
September 16, 2024

பாராளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

இன்று (04) பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள வீதிகளில் பலத்த பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்ற கூட்டத்திற்கு வருகை தரும் அமைச்சர்கள் செல்லும் வீதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடும் நபர்களை கண்காணித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலைகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது, விதிகளை மீறும் எவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது.