web log free
July 04, 2025

ராஜிதவின் அறிவிப்பு

எதிர்காலத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு, தமக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பண்டாரகமவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் 2015ஆம் ஆண்டே முதன்முறையாக அமைச்சரானார். நாங்கள் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் வந்ததன் காரணமாகவே இந்த மாறுதல் ஏற்பட்டது. இல்லையேல் அந்த நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றிருக்காது என தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எப்பொழுதும் அரசியல் சார்ந்துதான் முடிவெடுப்பதனால் தான் மக்கள் தம்மை ஏற்றுக் கொள்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd