web log free
April 28, 2025

பாரிய திட்டம் ஒன்றுக்காக இந்தியா செல்லத் தயாராகும் ஜனாதிபதி

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான முன்மொழிவை இந்திய அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகமும் இந்திய திட்டமொன்றை கோரியுள்ளதாகவும், அதற்கு வெளியில் இந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், இந்த விஜயத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இதற்கிடையில், மூன்று சர்வதேச நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகம், விற்பனையை வழங்க அரசாங்கம் கடந்த வாரம் முடிவு செய்தது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd