web log free
June 30, 2026

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு செல்ல எதிர்பார்த்துள்ள மக்களின் வசதிக்காக 4,768 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது. 

கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார். 

12 ஆம் திகதி வரை கொழும்பில் இருந்து வௌி மாவட்டங்களுக்கு பயணிப்பவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை வௌி மாவட்டங்களில் இருந்து கொழும்பிற்கும் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, 11, 12 , 13 ஆகிய தினங்களில் மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்தார். 

புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd