web log free
July 04, 2025

மொட்டுக் கட்சித் தலைவர் பதவிக்கு பசில் - நாமல் இடையே போட்டி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைமைத்துவத்திற்கு இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, கட்சியின் தலைமைப் பதவிக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.

அடுத்த தலைவராக பசில் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கருத்து தெரிவித்த வேளையில், கட்சியின் இளம் உறுப்பினர்களால் நாமல் ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அடுத்த தலைவர் தொடர்பில் பொதுஜன பெரமுனவில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட இரண்டு பெயர்களுக்கு மேலதிகமாக அமைச்சரவையின் பிரதம அமைச்சர் ஒருவரின் பெயரும் கட்சித் தலைமைக்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd