web log free
September 16, 2024

இலங்கை மக்கள் ஒன்றும் கொண்டை கட்டிய சீனர்கள் இல்லை!

இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதன் பின்னணியில் கோடிக்கணக்கான கடத்தல் இருப்பதாக சுரகிமு ஸ்ரீலங்கா தேசிய இயக்கத்தின் வணக்கத்திற்குரிய பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

100,000 குரங்குகளை வெளிநாடுகளில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்புவது இந்த நாட்களில் (15) மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக இருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஏனைய அமைச்சின் அதிகாரிகளால் எடுக்கப்படும் இவ்வாறான தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இலங்கை மக்கள் கொண்டை கட்டிய சீனர்கள் இல்லை என அவர் கூறுகிறார்.

உயிரியல் ஆராய்ச்சிக்காகவே குரங்குகள் இலங்கைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படுவதாகவும், இந்த முடிவை மாற்றிக்கொள்ள எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்கவிருப்பதாகவும் பஹியங்கல ஆனந்த சாகர தேரர் மேலும் தெரிவித்தார்.