web log free
February 08, 2026

உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு

திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவுக்காக திறைசேரியில் இருந்து பணம் விடுவிக்கப்படாமைக்கு தீர்வு காணப்படாததால், மேற்கண்ட திகதியில் வாக்குப்பதிவை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மீண்டும் ஒருமுறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd