web log free
September 19, 2025

கொழுந்து பறிக்கச் சென்ற பெண் கழுத்து வெட்டிக் கொலை

மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் இன்று (25) மாலை தேயிலைத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அக்மிமன பொலிஸார் தெரிவித்தனர்.

அக்மிமன பின்னதுவ புஹுலஹேன பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டின் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிக்க சென்ற இவர், மாலை வரை வீடு திரும்பவில்லை. இடியுடன் கூடிய மழை பெய்து வந்ததால், கணவன், தேயிலை தோட்டத்திற்கு சென்று பார்த்த போது, ​​ விழுந்து கிடந்துள்ளார். பின் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்படி பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd