web log free
February 08, 2026

ஷஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

ஷஷி வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சட்டவிரோதமான இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக ஷஷி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அன்றைய தினம் தற்காப்பு தரப்பினர் தயாராக இல்லாவிட்டாலும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் இவ்வாறு தாமதித்தால் திறந்த நீதிமன்றில் இந்த வழக்கை முடிக்க முடியாது எனவும் நீதவான் தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd