web log free
February 08, 2026

இலங்கை வரலாற்றில் முதல் பெண் பொலிஸ் மா அதிபர் விரைவில்

பெண் பொலிஸ் மா அதிபரின் கீழ் பணியாற்ற பொலீசார் தயாராக வேண்டும் என பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமசிங்க கூறுகிறார்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் மா அதிபர் பதவியை அடைவதற்குத் தேவையான பின்னணி ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த நாட்டில் பெண் பொலிஸ் மா அதிபர் என்ற கனவு நனவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற குழு மண்டபத்தில் நடைபெற்ற அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு முன்னிலையில் கருத்து வெளியிடும் போதே பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd