web log free
June 18, 2026

தேர்தல் களத்தில் குதித்த அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்கள் இன்று (09) முதல் பணிக்கு சமூகமளிக்க முடியும்.

அவர் பணியாற்றிய இடம் தனது தொகுதியாக இருந்தால் அந்த இடத்தில் பணிபுரிய முடியாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்தார்.

இன்று (09) பணிக்கு சமூகமளிக்குமாறும், தனது நிறுவன தலைவர் ஊடாக வேறு தொகுதிக்கு இடமாற்றம் பெற்றுக் கொள்ளுமாறும் செயலாளர் தெரிவித்தார்.

அந்த ஊழியர்கள் சம்பளம் பெறுவதற்கு வேறு தொகுதிக்கு இடமாற்றம் பெறுவது கட்டாயம் என செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் இந்த நிலையில் இரத்து செய்யப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்துகிறது.

மறுதேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச உத்தியோகத்தர்கள் தற்காலிகமாக தமது பணிகளை விட்டுவிட்டு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd