web log free
February 08, 2026

ஒரே வீட்டில் நான்கு சிறுவர்கள் காணாமல் போனதால் பரபரப்பு

நெலுவ தெல்லாவ, மியானாவடுர பகுதியில் ஒரே வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவித்தனர்.

01 வயது, 03 மாதங்கள், 10 வயது மற்றும் 13 வயதுடைய நான்கு சிறுவர்களே காணாமல் போயுள்ளனர்.

இக்குழந்தைகளின் பெற்றோர்கள் நெலுவ பிரதேசத்திலுள்ள தோட்டங்களில் தற்காலிகமாக பணிபுரிவதற்காக மியானதுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில், நேற்றிரவு முதல் பிள்ளைகளை காணவில்லை என 119க்கு தகவல் கிடைத்துள்ளது.

காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை எனவும், காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் விஜேசிங்கவின் பணிப்புரைக்கமைய, நெலுவ பொலிஸார் விசேட பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd