web log free
September 01, 2025

20ஆம் திகதிவரை ஒப்படைக்க முடியும்

சட்டவிரோத மற்றும் அனுமதிப்பத்திரமற்ற வெடிபொருட்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கான கால எலலை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த கால எல்லை இம்மாதம் 20ம் திகதி காலை 6.00 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியின் பின்னர் இவற்றைக் கைப்பற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, நேற்று தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd