web log free
February 08, 2026

இனி பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காது

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை கிடைக்காது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பணத்தில் படித்து வேலை வாய்ப்புகளை வழங்கி வந்தாலும் எதிர்காலத்தில் அது சாத்தியப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை சனத்தொகையுடன் ஒப்பிடும் போது மிக அதிகமாக இருப்பதாக அவர் கூறினார்.

அதன்படி அந்த நிபந்தனைகளை கருத்தில் கொண்டு இளைஞர்களை இலக்கு வைத்து தற்போது  வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்படும் என்றார்.

அகுனகொலபல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd