web log free
May 09, 2025

பகலில் சஜித், இரவில் ரணில்! பல எதிர்க்கட்சி எம்பிக்கள் இரட்டை வேடம்

இன்னும் இரண்டு போயாவிற்கு முன்னர் சமகி ஜனபலவேகவில் பாதி பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை தெரிவிக்க தயாராகி வருவதாக முன்னாள் அமைச்சரும், சமகி ஜனபலவேகவின் உப தவிசாளருமான பி. ஹரிசன் வெளிப்படுத்தினார்.

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பகலில் சஜித்தை எதிர்கொண்டாலும், இரவில் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தானும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாகவும், 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தன்னுடன் இணைந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் பி. ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.

“உள்ளூராட்சி சபை தேர்தல் வர வாய்ப்பில்லை. மாகாண சபைத் தேர்தல்கள் இல்லை. அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நிபந்தனையின்றி உதவ நாங்கள் தயாராக உள்ளோம். நான் பதவிகளுக்காக காத்திருக்கவில்லை, கிட்டத்தட்ட 40 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியில் செயற்பட்டு வருகிறேன். அதனால்தான் நானும், எங்கள் தொகுதியின் உள்ளாட்சி உறுப்பினர்களும், மற்ற 100 உள்ளாட்சி உறுப்பினர்களும் இரண்டு வாரங்களில் உங்களிடம் வரத் தயாராக இருக்கிறோம் என்று முடிவு செய்தேன். அது மாத்திரமன்றி, இன்னும் ஓரிரு நாட்களில் ரணில் விக்கிரமசிங்கவின் மடிக்குச்  சமகி ஜனபலவேகவின் பாதி பேர் செல்வதை நிறுத்த முடியாது என்பதை  கூறுகிறேன். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பகலில் சஜித்திடம் முகத்தைக் காட்டினாலும் இரவில் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd