web log free
September 16, 2025

சஜித் அணி எம்பிக்கள் 16 பேர் அரசாங்கத்துடன் இணைவு

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் சில தினங்களில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் பீ ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாகவும், பல மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த குழு அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd