web log free
September 30, 2023

கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெற்று புதிய வரலாறு படைக்கும் செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட உள்ளார்.

நாளைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற உள்ள அரச நிகழ்வில் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெற உள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக தற்போது செயல்படும் செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தின் பதில் முதலமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.

பல வருடங்கள் அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் கொண்ட செந்தில் தொண்டமானின் சிறந்த தலைமை நிர்வாக திறமை மிக்கவராவார்.

இவரது நிர்வாக திறமையின் பலனாக இந்திய வம்சாவளி மலையக தமிழர் ஒருவராக முதல் முறை கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் பதவியில் செந்தில் தொண்டமான் அமர உள்ளமை விசேட அம்சமாகும்.  

Last modified on Tuesday, 16 May 2023 16:15