web log free
February 08, 2026

தங்கம் கடத்திய இலங்கை எம்பி

சட்டவிரோதமான முறையில் தங்கம் கொண்டு வந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை சுங்கத்தின் வருமான கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோதமான முறையில் 3 கிலோ 397 கிராம் தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் சந்தை பெறுமதி சுமார் 74 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், எம்.பி.யின் பையில் இருந்த மொபைல் போன்களை சுங்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அங்கு 91 ஸ்மார்ட் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அதன் சந்தை பெறுமதி 4.2 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd