web log free
April 29, 2025

ஆளும் கட்சி பிரேரணைக்கு 15 எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆதரவு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல எதிர்க்கட்சிகள் வாக்களிக்கத் தயாராகி வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதும் கூட, அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி, பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய தினம் பாராளுமன்ற கூட்டத்திற்கு கட்டாயம் கலந்து கொள்ளுமாறு ஆளும் கட்சி அமைப்பாளர் அலுவலகத்தினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்த இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் உட்பட ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலர் ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து தலைவர் ஜானக ரத்நாயக்க நீக்கப்படுவது தொடர்பில் இன்று (24) பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளதுடன், அது தொடர்பான வாக்கெடுப்பு பிற்பகல் நடைபெறவுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd