web log free
June 06, 2023

மலையகத்தில் அதிகரிக்கும் புலித் தாக்குதல், இன்றும் ஒருவர் பாதிப்பு

தேயிலை மலையில் புலியின் தாக்குதலுக்கு உள்ளான தோட்டத் தொழிலாளி ஒருவர் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்ஓயா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசூரிய தெரிவித்தார்.

பிரிட்வெல் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவரை, தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த புலி இன்று (24) தாக்கியுள்ளது.

புலியை காப்புக்காட்டுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நல்லதன்னிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

தோட்டத் தொழிலாளர்கள் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் நாய்கள் தோட்டத் தொழிலாளர்களுடன் தேயிலைத் தோட்டத்திற்கு வருவதுடன், தேயிலைத் தோட்டத்திற்கு நாய்களை வேட்டையாட வரும் புலிகள் வேட்டையாடுவதற்கு இடையூறு விளைவிப்பவர்களைத் தாக்கி காயப்படுத்துவதாக நல்லதண்ணியா வனவிலங்கு அலுவலகம் தெரிவிக்கிறது.