web log free
October 21, 2025

புத்தர் சிலை சேதம்

இமதுவ அகுலுகஹா கல்குவாரிக்கு அருகில் கட்டப்பட்டுள்ள புத்தர் விகாரையின் கண்ணாடியை யாரோ உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை கவிழ்த்துள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படவில்லை என அப்பகுதியின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புத்தர் சிலை இருக்கையில் முகம் குப்புற விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் பலர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

புத்தர் விகாரையின் கண்ணாடியை உடைத்து புத்தர் சிலையை உடைத்தவர்கள் பற்றிய தகவல் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கவில்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd