web log free
July 03, 2025

பண மோசடி சிக்கலில் மஞ்சு நிசங்க

குளோபல் ஸ்ரீலங்கா காங்கிரஸின் தலைவர் மஞ்சு நிஷங்க தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பணமோசடி சட்டத்தின் கீழ் இந்த நபர் குற்றம் செய்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.

மஞ்சு நிசங்கவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd