web log free
January 08, 2026

வடக்கு கிழக்கில் பௌத்தர்களுக்கு அநீதி!

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பௌத்தர்கள் பாகுபாடு காட்டப்படுவதாகவும், விகாரை கட்டுவதற்கு அனுமதிக்கப்படாத நிலை உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதியின் சட்டத்தரணி சிரந்த வளலியெத்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசியலமைப்பு ரீதியாக பௌத்த மதத்தில் பிற மதங்களை நம்பும் மக்கள் செல்வாக்கு செலுத்த முடியாத வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டுமென சிரந்த வளலியத்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் தலைமைத்துவத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு எவரையும் தாம் காணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd